ஈரானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று வெளியிட்ட தகவலின்படி,
ஈரானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் 5.6 ரிக்டர் அளவிலான பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
கடந்த புதன்கிழமை அதிகாலை ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்றுவரை, பக்திகா மாகாணத்தில் உள்ள பர்மால் மற்றும் கியான் மாவட்டங்களிலும், கோஸ்ட் மாகாணத்தில் உள்ள ஸ்பெரா மாவட்டத்திலும் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து 1,455 பேர் காயமடைந்துள்ளனர்.