முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் மேலும் 639 பேருக்கு கரோனா: 4 பேர் பலி

பாகிஸ்தானில் புதிதாக 639 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
கோப்புப்படம்
பகிர்:

பாகிஸ்தானில் புதிதாக 639 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில்,

கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் 639 பாதிப்பும், 4 பலிகளும் பதிவாகியுள்ளது. இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1,516,789 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது சிகிச்சையில் 18,049 பேர் உள்ளனர். இதில் 707 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

நோய் பாதித்த 1,468,449 பேர் தொற்றியிலிருந்து குணமடைந்தனர். புதிதாக பலியானவர்களைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 30,291 ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக, பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் 5,70,934 பேருக்கும், அதைத்தொடர்ந்து கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் இதுவரை 5,03,279 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

முழு கட்டுரையைப் படிக்க →