உலகம்

கச்சா எண்ணெய் விலையை குறையுங்கள்: ரஷியாவுக்கு இந்தியா கோரிக்கை

DIN


இந்தியாவுக்கு வழங்கிவரும் கச்சா எண்ணெயின் விலையை பேரலுக்கு 70 டாலருக்கு கீழ் குறைக்க வேண்டும் என்று ரஷியாவுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் ஆக்கிரமிப்பு தொடங்கியதிலிருந்து ரஷியாவிடமிருந்து தற்போதுவரை 40 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் மத்திய அரசால் வாங்கப்படுகிறது. சமீபத்தில் மொத்தமாக 15 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு ரஷியா சலுகை விலையில் வழங்கியது.

இந்நிலையில், ரஷியா வழங்கிவரும் கச்சா எண்ணெயை 70 டாலருக்கு கீழ் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. தற்போது பேரல் கச்சா எண்ணெய் 105 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.  

ரஷியா மீது பல்வேறு மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள தடைகளால் ரஷியாவின் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. 

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிப்பொருள்களின் விலை உயர்ந்து பொருளாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT