கோப்புப்படம் 
உலகம்

ஆப்கனில் பெண் செய்தியாளர்கள் முகத்தை மூடியிருக்க வேண்டும்: தலிபான்கள் உத்தரவு

ஆப்கானிஸ்தானில் பெண் செய்தியாளர்கள் செய்தி வாசிக்கும்போது தங்கள் முகத்தை முழுவதுமாக மூடியிருக்க வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். 

DIN

ஆப்கானிஸ்தானில் பெண் செய்தியாளர்கள் செய்தி வாசிக்கும்போது தங்கள் முகத்தை முழுவதுமாக மூடியிருக்க வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அங்கு பெண்களுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், பெண்கள் தலை முதல் கால் வரை மறைக்கக்கூடிய பர்தா அணிய வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

இதையடுத்து அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றும் பெண்களும் பர்தா அல்லது ஹிஜாப் அணிய வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். 

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகள் அபையின் உதவிக்குழுவில் பணியாற்றும் பெண் ஊழியர்களும் இனி கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என தலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்த நிலையில்தான் ஊடகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், பெண் செய்தியாளர்கள் செய்தி வாசிக்கும்போது முகத்தை முழுவதுமாக மறைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். 

இதுபோன்று பெண்கள் கல்வி பயிலக் கூடாது, வெளியிடங்களுக்கு தனியே பயணிக்கக்கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT