கோப்புப்படம் 
உலகம்

அதிகரிக்கும் கரோனா பரவல்: ஷாங்காயில் மீண்டும் பொதுமுடக்கம்?

சீனாவின் ஷாங்காய் நகரத்தில் அதிகரித்து கரோனா தொற்று பரவலின் காரணமாக மீண்டும் ஒரு பொதுமுடக்கத்தை எதிர்கொள்ளும் சூழல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

DIN

சீனாவின் ஷாங்காய் நகரத்தில் அதிகரித்து கரோனா தொற்று பரவலின் காரணமாக மீண்டும் ஒரு பொதுமுடக்கத்தை எதிர்கொள்ளும் சூழல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த சில நாள்களாக ஷாங்காய் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதன்கிழமை மூன்று பேருக்கு புதிதாக தொற்று பரவல் கண்டறியப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகளை ஷாங்காய் அரசு அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

பொழுதுபோக்கு அரங்குகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், நகருக்குள் வருபவர்களுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்படுவதாகவும் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருமுறை பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருவது மக்களை அச்சமடையச் செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு: 5 பேர் பலி; 14 பேர் படுகாயம்

கேரளத்தில் அமீபா தொற்றால் மூளை பாதிப்பு: நோயாளிகள் எண்ணிக்கை 18-ஆக உயர்வு!

பரிசுத்த மனம்... சோனம் பாஜ்வா!

Vijay பவுன்சர்கள் மீது தவெக தொண்டர்கள் புகார்! | செய்திகள்: சில வரிகளில் | 26.08.25

தீயான வியப்பு காத்திருக்கிறது... ஹரிஷ் கல்யாண் பகிர்ந்த டீசல் பட அப்டேட்!

SCROLL FOR NEXT