பாகிஸ்தானில் திங்கள்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இன்று (டிச.18) காலை 11.38 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | அமித்ஷா மக்களவையில் பேசாமல் தொலைக்காட்சியில் பேசிக் கொண்டிருக்கிறார்: ஜெய்ராம் ரமேஷ்
இதனால் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இதற்கு முன்பாக கடந்த நவம்பர் 15-ஆம் தேதி பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், மீண்டும் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ‘எதிர்காலத்தில் இதுபோன்ற கனமழையை அடிக்கடி எதிர்பார்க்கலாம்’