உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி

DIN

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாகினர். 

ஆலன் பிரீமியம் வணிக வளாகத்தில் புகுந்த மர்மநபர் பொதுமக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார். மர்மநபரை காவல் துறையினர் சுட்டுக்கொன்ற நிலையில் துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் உள்பட 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெக்சாஸுக்கு வடக்கே சுமார் 25 மைல் (40 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள ஆலன் நகரில் உள்ள வணிக வளாகத்தில் மாலை 3:30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்தது. டெக்சாஸ் கவர்னர் கிரெக் அபோட் துப்பாக்கிச்சூடு சம்பவம் 'சொல்ல முடியாத சோகம்' என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவீதா மருத்துவக் கல்லூரியில் மாணவா்களுக்கான உச்சி மாநாடு

திருவாரூரில் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு

பத்ரிநாத் கோயில் பக்தா்கள் வழிபாட்டுக்குத் திறப்பு

இன்று முதல் ஹஜ் பயணிகளுக்கான மருத்துவ முகாம்

மழை வெள்ளத்தில்...

SCROLL FOR NEXT