கோப்புப்படம் 
உலகம்

ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணியாவிட்டால் 10 ஆண்டுகள் சிறை!

ஈரானில் பெண்கள் ஆடைக் கட்டுப்பாட்டை மீறினால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் மசோதா அந்த நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

DIN

ஈரானில் பெண்கள் ஆடைக் கட்டுப்பாட்டை மீறினால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் மசோதா அந்த நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

ஈரானில் பெண்கள் வெளியே செல்லும்போது ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயமாக உள்ளது. எனினும் அங்கு ஹிஜாப்புக்கு எதிராக குரல்கள் வலுத்து வருகின்றன. 

கடந்த ஆண்டு ஹிஜாப் அணியாத இளம் பெண் ஒருவர் காணாமல் போன நிலையில் பின்னர் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அங்கு போராட்டங்கள் வெடித்தன. 

இந்நிலையில் ஈரான் அரசு, பெண்களின் ஆடைக் கட்டுப்பாட்டுக்காக ஒரு மசோதாவை நிறைவேற்றியுள்ளது. 

அதன்படி, ஈரானில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் அணியாமல் சென்றால், ஆடைக் கட்டுப்பாட்டை மீறினால் 5 முதல் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும், அத்துடன் இந்திய மதிப்பில் ரூ. 3.5 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசுத் தலைவருடன் சுபான்ஷு சுக்லா சந்திப்பு!

5.5 கோடி விசாக்கள் மறுபரிசீலனை: அமெரிக்கா அறிவிப்பு! இந்தியர்கள் மட்டும் 50 லட்சம் பேர்!!

வார பலன்கள் - மேஷம்

தர்மபுரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!

விஜய் தராதரம் அவ்வளவுதான்: அமைச்சர் கே.என். நேரு பதிலடி!

SCROLL FOR NEXT