கோப்புப்படம் 
உலகம்

ஜப்பானை தொடர்ந்து வடகொரியாவுக்கும் சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

DIN

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் 7.5 ரிக்டரில் பதிவான நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஜப்பானின் கடற்கரையோர நகரங்களான இஷிக்வா, நிகாடா, டொயாமா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  நிலநடுக்கத்தின் மையப் பகுதியிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கடற்பகுதிகளில் மிக மோசமான சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஒருசில பகுதிகளில் சிறிய அளவிலான சுனாமி அலைகள் தாக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், வட கொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.  அலைகள் 2.08 மீட்டர் (6.8 அடி) வரை அதன் கரையை அடையலாம் என்று  தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

TTV Dhinakaran கூட்டணியிலிருந்து விலக நயினார் நாகேந்திரன் காரணமா? குற்றச்சாட்டும் பதிலும்!

ரூ.1.88 லட்சத்துக்கு லட்டு ஏலம் வென்ற தெலங்கானா முஸ்லிம் பெண்!

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை எதிரொலி: பெரும் போராட்டம் வெடித்தது!

விழிகளில் ஒரு வானவில்... ஸ்ரீலீலா!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பிஆர்எஸ் கட்சியும் புறக்கணிப்பு!

SCROLL FOR NEXT