சீனத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.
சீனத்தில் யுனான் மாகாணத்தில் உள்ள மலைக் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 20 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 24 பேர் காணவில்லை என உள்ளூர் பேரிடர் நிவாரண தலைமையகம் தெரிவித்துள்ளது.
நிபுணர் குழுவின் முதற்கட்ட விசாரணையில், செங்குத்தான மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.