முகப்பு
உலகம்

துருக்கியில் சங்கிலித்தொடர் விபத்தில் 4 பேர் பலி!

2 கார்கள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் நால்வர் பலி; மூவர் காயம்

Updated On : 6 நவம்பர், 2024 at 12:18 PM
கோப்புப் படம்
பகிர்:

துருக்கியில் ஏற்பட்ட சங்கிலித்தொடர் விபத்தில் 4 பேர் பலியாகினர்.

துருக்கியில் ஒஸ்மானியே நகரில் புதன்கிழமையில் (நவ. 6) சாலையில் சென்று கொண்டிருந்த 2 கார்கள் மற்றும் ஒரு டிராக்டர் ஏற்படுத்திய சங்கிலித்தொடர் விபத்தில் 2 கார்களும் பாதிக்கும் மேலாக நொறுங்கிப் போனது.

இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, காயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இருந்தபோதிலும், அவர்களில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இந்த விபத்து தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →