இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் சேதமடைந்த கட்டிடங்கள் கோப்புப் படம்
உலகம்

காஸா: இஸ்ரேல் தாக்குதலால் 42,800 பாலஸ்தீனர்கள் பலி!

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலில், இதுவரையில் 17000 குழந்தைகள், 11400 பெண்கள் உள்பட 42800 பாலஸ்தீனர்கள் பலி

DIN

காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 38 பேர் பலியாகினர்.

காஸாவின் கான் யூனிஸ் பகுதியில், வெள்ளிக்கிழமையில் (அக். 25) இஸ்ரேல் ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 14 பேர் குழந்தைகள் உள்பட 38 பாலஸ்தீனர்கள் பலியாகினர். அவர்களில் 13 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

டிரோன் தாக்குதலில் பலியாகும் மக்களில், பெரும்பாலும் உணவுக்காக வெளியில் நடமாடுபவர்கள்தான் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

மேலும், லெபனானில் ஒரு விடுதி மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 3 பத்திரிகையாளர்களும் பலியாகினர். அந்த நேரத்தில், விடுதியில் பல்வேறு செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த 18 பத்திரிகையாளர்கள் தங்கியிருந்துள்ளனர். இது திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை என காஸா செய்தி நிறுவனங்கள் இஸ்ரேலை குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், இதற்கு தீர்வு காணும் நோக்கில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரான ஆண்டனி பிளிங்கனை ஜோர்டான் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அய்மன் சஃபாதி சந்தித்து பேசினார்.

காஸாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரில் காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலில், இதுவரையில் 17,000 குழந்தைகள், 11,400 பெண்கள் உள்பட 42,800 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். மேலும், இந்த தாக்குதலில் சுமார் 1000 சுகாதாரப் பணியாளர்களும், 220 ஐ.நா. அவையைச் சேர்ந்த 220 பேரும் பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT