இஸ்ரேலின் தாக்குதல்களில் ஒரே நாளில் 13 பாலஸ்தீனர்கள் பலி... AP
உலகம்

காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட 13 பேர் பலி!

இஸ்ரேலின் தாக்குதலில் 13 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

காஸாவில், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 5 குழந்தைகள் உள்பட 13 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா பகுதியில், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சிப்படைக்கு இடையே போர் நடைபெற்று வந்த நிலையில் அக்.10 ஆம் தேதி போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், தெற்கு காஸாவில் இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்துள்ள முகாம்களின் மீது வியாழக்கிழமை (ஜன. 8) இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், காஸாவின் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் நேற்று ஒரே நாளில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் இருதரப்புக்கும் இடையில் போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டது முதல் காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 425 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

In Gaza, 13 Palestinians, including 5 children, were reportedly killed in Israeli attacks that violated the ceasefire agreement.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தக்கலையில் பாஜகவினா் தா்னா: எம்எல்ஏ உள்பட 147 போ் கைது

தூத்துக்குடி மாவட்ட மீன்பிடித் துறைமுகங்களில் விசைப் படகுகள் நிறுத்திவைப்பு!

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 635 பேருக்கு பணிநியமன ஆணை

புகையில்லா போகிப் பண்டிகை: ஆட்சியா் வேண்டுகோள்

நாகா்கோவில் வேலைவாய்ப்பு முகாமில் 604 பேருக்கு பணி நியமன ஆணைகள்

SCROLL FOR NEXT