நேபாளம்: தரையிறங்கும்போது விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு
நேபாளத்தில் தரையிறங்கும்போது விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேபாளத்தில் தரையிறங்கும்போது விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து போகாராவுக்கு புத்தா விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் சனிக்கிழமை புறப்பட்டது.
பிற்பகல் 3.45 மணிக்கு போகாரா சர்வதேச விமான நிலையத்தில் விமனாம் தரையிறங்கும்போது பறவை அதன்மீது மோதியதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இருப்பினும், அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
சம்பவத்திற்குப் பிறகு, விமானத்தில் தொழில்நுட்பக் குழு பாதுகாப்பு சோதனை மேற்கொண்டது. அதில் உந்துவிசை பிளேடு சிறிது சேதமடைந்ததாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.
இதனால் போகாரா சர்வதேச விமான நிலையத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
An aircraft of a private Nepali airline was on Saturday hit by a bird while landing at Pokhara International Airport, about 200 kilometres west of Kathmandu.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.