முகப்பு
உலகம்

நேபாளம்: மர்ம பொருள் வெடித்து 4 சிறுவர்கள் காயம்

நேபாளத்தில் மர்ம பொருள் வெடித்து 4 சிறுவர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 2:50 PM
கோப்புப்படம். - IANS
பகிர்:

நேபாளத்தில் மர்ம பொருள் வெடித்து 4 சிறுவர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தின் சப்தரி மாவட்டத்தில் உள்ள துதைலா நதி அருகே சனிக்கிழமை 4 சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மர்ம பொருள் வெடித்ததில் அவர்கள் 4 பேரும் காயமடைந்தனர். சிறுவர்கள் சுற்றுலா சென்றிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இதுகுறித்து துணை காவல் கண்காணிப்பாளர் தம்பர் பகதூர் பூரி கூறுகையில், வனப்பகுதியில் பட்டாசுக்கு பயன்படுத்தப்படும் ராக்கெட் போன்ற ஒரு பொருளை அவர்கள் கண்டுபிடித்தனர். அதை அவர்கள் எடுத்தபோது வெடித்துள்ளது.

காயமடைந்த சிறுவர்கள் ரூபனியில் உள்ள மாதேஷ் மாகாண மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலை ஆபத்தில் இல்லை. இவ்வாறு குறிப்பிட்டார். இதனிடையே இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

summary

Four children were seriously injured on Saturday when an unidentified object they were playing with exploded in Nepal's Madhesh province, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.