ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தானின் தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலியாகினர்.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளின் எல்லைகளில் போர்ப் பதற்றம் இருந்துவரும் நிலையில், 48 மணிநேர போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஆப்கானிஸ்தானின் உர்குன் பகுதியில் பாகிஸ்தான் வான்வெளித் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் கபீர், சிப்கதுல்லா, ஹாரூன் ஆகிய 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானின் இந்தத் தாக்குதலுக்கு கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், பாதிக்கப்பட்டோரின் மரியாதை செலுத்தும் விதமாக, இலங்கை - பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகள் பங்கேற்கவிருந்த முத்தரப்பு தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: இந்தியாவுடன் ஆப்கன் சதித் திட்டம்! பாக். அமைச்சர் குற்றச்சாட்டு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.