பார்வையிழந்த மனைவிக்கு வாழ்நாள் சத்தியம்! அன்புக் கணவருக்கு குவியும் பாராட்டுகள்!
சீனாவில் பார்வையிழந்த மனைவியைவிட்டு பிரிய மாட்டேன் என்று வாக்குறுதி அளித்து வாழும் கணவருக்கு பலரும் பாராட்டு
சீனாவில் பார்வையிழந்த தனது மனைவியை ஒருவர் 12 ஆண்டுகளாக நேசித்து வருவது பலரின் பாராட்டுகளையும் அன்பையும் பெற்றுள்ளது.
சீனாவில் ஷாண்டோங் மாகாணத்தில் லி ஜுக்ஸின் (39) என்பவருக்கும், ஜாங் ஸியாங் என்பவருக்கும் 2008 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார்.
இந்த நிலையில், ஜுக்சின் மனைவி ஜாங்குக்கு 2013 ஆம் ஆண்டில் கண்களில் பாதிப்பு ஏற்பட்டு, 2014 ஆம் ஆண்டில் முற்றிலும் பார்வை பறிபோனது. மேலும், இவரின் சிகிச்சைக்காக 500,000 யுவான் (சுமார் ரூ. 61.7 லட்சம்) செலவழிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
தனது மனைவிக்கு பார்வை பறிபோனாலும், ஒருபோதும் அவரைவிட்டு பிரிய மாட்டேன். வாழ்நாள் முழுவதும் அவருடனேயே இருப்பேன் என்றும் ஜுக்சின் உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து, தனது வீடு மற்றும் அவர்களின் பணியிடத்திலும் பொருள்கள் எதையும் மறுசீரமைக்கவில்லை. ஏனெனில், அவரின் மனைவிக்காக ஜுக்சின் எதையும் மறுசீரமைக்கவில்லை. அன்றாட வேலைகள் மற்றும் சமையலையும் ஜுக்சினே மேற்கொண்டார்.
இவர்களின் வாழ்க்கை குறித்து அந்நாட்டு உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், ஜுக்சினின் அர்ப்பணிப்பு மற்றும் காதல் குறித்து பலரும் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: பசுவை விலங்காகக்கூட கருதுவதில்லை! தெருநாய் விவகாரத்தில் பிரதமர் மோடியால் சிரிப்பலை!
China husband praised for caring for blind wife for 12 years
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.