வெனிசுவேலா மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்! அவசரநிலை பிரகடனம்!
வெனிசுவேலா தலைநகரில் இருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்..
வெனிசுவேலா நாட்டின் தலைநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர்.
வெனிசுவேலா தலைநகர் கராகஸ் மற்றும் மிரண்டா, அராகுவா, லா குவயிரா ஆகிய மாநிலங்களின் மக்கள் குடியிருப்புகள் மற்றும் ராணுவக் கட்டமைப்புகளின் மீது, சனிக்கிழமை (ஜன. 3) காலை வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு, அமெரிக்காதான் காரணம் என வெனிசுவேலா அரசு குற்றம்சாட்டியுள்ள நிலையில் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அதிபர் நிகோலஸ் மதுரோ அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வெனிசுவேலா மீதான வான்வழித் தாக்குதல்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
ஆனால், முக்கிய நகரங்களில் போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டதும் அங்குள்ள கட்டமைப்புகளில் தீப்பற்றி எரியும் விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து உள்ளூர்வாசிகள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
முன்னதாக, போதைப் பொருள் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகக் கூறி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த சில மாதங்களாக வெனிசுவேலா அரசுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.
இத்துடன், வெனிசுவேலா மீதான தாக்குதல்கள் அதிபர் டிரம்ப்பின் உத்தரவின் கீழ் நடைபெற்றதாக, அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுகுறித்து அமெரிக்க அரசு எந்தவொரு கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Thousands of people are evacuating as airstrikes have been carried out in major cities of Venezuela, including the capital.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.