FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் மோதலால் சீனா, ரஷியாவுக்கு பயன்!

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையேயான மோதலால சீனா, ரஷியா பயனடைகின்றன: காஜா கல்லாஸ்

Updated On : 18 ஜனவரி 2026, 10:59 am IST
அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றியம் - சித்திரிப்புப் படம்
பகிர்:

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான அமெரிக்காவின் மோதலால் சீனா மற்றும் ரஷியா நாடுகள் பயனடைவதாக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் வரிவிதிப்பையடுத்து, ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ், “நட்பு நாடுகளிடையே (ஐரோப்பிய ஒன்றியம் - அமெரிக்கா) பிளவு ஏற்படுவதால், சீனாவும் ரஷியாவும்தான் பயனடைகிறார்கள்.

கிரீன்லாந்தின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டால், நேட்டோவால்தான் இதனை நாம் தீர்க்க முடியும்.

Advertisement

Advertisement

வரிவிதிப்பால், ஐரோப்பாவும் அமெரிக்காவும் ஏழ்மையான நாடுகளாக மாற்றும் அபாயம் ஏற்படுகிறது. இதனால், நமது பகிரப்பட்ட செழிப்பு குறைமதிப்புக்கு உள்படுத்தப்படுகின்றன.

உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்குக் கொண்டுவரும் எங்கள் முயற்சியை திசைதிருப்புவதை அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்புக்கு கிரீன்லாந்து முக்கியமானது என்று டிரம்ப் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். இருப்பினும், கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தொடர்ந்து எதிர்ப்புதான் தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது 10 சதவிகித வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்து உத்தரவிட்டார்.

summary

Trump's Tariff: China and Russia must be having a field day says EU Kaja Kallas

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments