நிதியுதவி கோரி தலைகுனிந்து நின்றோம்: பாக். பிரதமர்
நிதியுதவி கோரி உலக நாடுகளிடம் தலை குனிந்து நின்றதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் பேச்சு
பாகிஸ்தானுக்காக நிதியுதவிகோரி மற்றைய நாடுகளுக்குச் சென்றதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃஃப் ஒப்புக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னணி வணிகர்களிடம் அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷரீஃஃப் பேசுகையில், “பாகிஸ்தானின் தற்போதைய நிலைமை என்னவென்றால், நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால், இதில் கடன்களும் அடங்கும்.
கடன் வாங்குவதற்காகச் சென்று தலை குனிந்ததும் உங்களுக்குத் தெரியும்.
Advertisement
Advertisement
நானும் ராணுவத் தளபதி அசிம் முனீரும் உலகம் முழுவதும் சென்று, பணத்துக்காக பிச்சை எடுப்பதற்கு வெட்கப்படுகிறோம். கடன் வாங்குவது எங்கள் சுயமரியாதைக்கு மிகப்பெரிய சுமை. எங்கள் தலைகள் வெட்கத்தால் தலை குனிகின்றன.
நாட்டை நிலைப்படுத்த கடுமையான கொள்கைகளைப் பயன்படுத்திய பிறகு, பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் திட்டத்திற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் பாகிஸ்தான் தீவிரமாக விவாதித்து வரும் நேரத்தில் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன” என்று தெரிவித்தார்.
Head bowed, self-respect compromised: Pak PM Shehbaz Sharif on foreign loan humiliation
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.