கர்நாடகத்தில் இன்று மேலும் 5,483 பேருக்கு கரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,24,115 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் இன்று 84 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2,314 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,130 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 121 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 9,217ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 7,176 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 10,320 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 265 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் 7,543 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து மகாராஷ்டிரத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,22,118 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 2,56,158 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 1,50,662 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் புதிதாக 1,310 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,596 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக 10,376 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்த பாதிப்பு 1,40,933 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று 4,868 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரேநாளில் 5,881 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 903 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 2,78,304 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,482 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 8,39,981 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
நாட்டில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் 21 நாள்கள் ஆனது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 100 வயது மூதாட்டி, கரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
மற்ற மண்டலங்களில் கரோனா தொற்று மெல்ல குறைந்து வரும் நிலையில் அம்பத்தூர் மண்டலத்தில் கரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. விரிவான செய்திக்கு..
நியூ யார்க்கில் கரோன தொற்று உறுதி செய்யப்பட்ட ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய் மரணம் அடைந்தது. விரிவான செய்திக்கு..
நாட்டில் முதல் முறையாக ஒரே நாளில் 6 லட்சத்தக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
உலக அளவில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை தடுப்பு மருந்துகள் வெளிவராத நிலையில், கரோனா பாதிப்பும், பலியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தில்லியில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 1,093 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 11,147 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக 10,167 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 6,128 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு பிளாஸ்மா தானம் இலவசமாக வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 4,689 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 5,864 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 2.40 லட்சத்தை நெருங்கியுள்ளது. விரிவான செய்திக்கு..
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,114 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 2,77,402 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் பல்வேறு தளர்வுகளுடன் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஜூலை 31ம் தேதியுடன் பொது முடக்கம் முடிவடைய இருந்த நிலையில், அதே கட்டுப்பாடுகளுடன், மீண்டும் ஆகஸ்ட் 31 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் ஒட்டுமொத்தமாகக் கரோனா பாதித்தவர்களில் 85% பேர் அதாவது 81,530 பேர் குணமடைந்துவிட்டதாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட புள்ளி விவரம் தெரிவிக்கிறது. விரிவான செய்திக்கு..
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,063 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 2,76,288 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 9,211 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று 5,309 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) ஒரேநாளில் 6,426 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் மொத்த பாதிப்பு 2,34,114 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
சீனாவில் மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று 100க்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். விரிவான செய்திக்கு..
மற்ற நபர்களை விடவும் புகைப்பழக்கம் இருப்பவர்களுக்கு கரோனா எளிதில் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
இந்தியாவில் கரோனாவுக்கு பலியாவோர் விகிதம் 2.23% ஆக இருக்கும் நிலையில், நாட்டிலேயே கரோனா பலியில் குஜராத் மாநிலம் 4.09% ஆக உள்ளது. விரிவான செய்திக்கு..
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,475 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 8,28,990 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
உங்களுக்கு கரோனா தொற்றில்லை என்று எட்வார்டிடம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சொன்ன போது எந்த பலனும் இல்லை, ஏன் என்றால், அறை முழுக்க நிரம்பியிருந்த கரோனா நோயாளிகளிடம் இருந்து அவருக்கு தொற்று ஏற்கனவே பரவியிருந்தது. விரிவான செய்திக்கு..
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,068 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 29 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா நோய்த் தொற்றால் தமிழகத்தில் இதுவரையில் சென்னையில்தான் பாதிக்கப்பட்டவர்கள் மிக அதிகம் - 96,438, ஒரு லட்சத்துக்கு சற்றுக் குறைவு. ஆனால், தற்போது பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. விரிவான செய்திக்கு..