இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேலும் கூறியதாவது: நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 53,601 பேருக்கு கரோனா தொற்று உறுதி உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 22,68,675ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 871 போ் பலியாகியுள்ளனர். இதன்மூலம் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 45,257 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 62,064 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,15,074ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில்1,007 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ஒட்டுமொத்தமாக பலியானோரின் எண்ணிக்கை 44,386ஆக உயர்ந்துள்ளது. தற்போது, கரோனாவால் பாதிக்கப்பட்டு 6,34,945 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டிதுள்ளது. இதன்படி 2,00,24,263 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 733,995 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் ஒரே நாளில் 47 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 52 லட்சத்தை நெருங்குகிறது.
மகாராஷ்டிரத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 9,181 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 4,938 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 70 பேர் உள்பட இதுவரை 15,001 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு இன்று இரண்டாவது முறையாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. விரிவான செய்திக்கு..
மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சரவணனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விரிவான செய்திக்கு..
ஒரு போர் வீரரைப் போல கரோனவை எதிர்கொள்ளுங்கள் என்று பஞ்சாப் மாநில மக்களுக்கு முதல்வர் அமரீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். விரிவான செய்திக்கு..
கடந்த சில மாதங்களாக சென்னையில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையில், ஆகஸ்ட் மாதத் துவக்கத்தில் இருந்தே மெல்ல கட்டுப்பட்டுள்ளது. எனினும், அம்பத்தூர் மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்தே வருகிறது. விரிவான செய்திக்கு..
கரோனா தொற்றுப் பரவல் காரணமக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் தளர்த்தப்பட்டு, கோயில் திறக்கப்பட்டது முதல், திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 743 பேருக்கு இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக.. விரிவான செய்திக்கு..
நாட்டில் இன்று ஒரே நாளில் கரோனா பாதிப்பில் இருந்து 54,859 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,35,743 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
நாட்டில் இன்று ஒரே நாளில் கரோனா பாதிப்பில் இருந்து 54,859 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,35,743 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 1,510 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 12,248 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநில கரோனா பாதிப்பு நிலவரங்கள் பற்றிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..
கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,211 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் பலியாகியுள்ளனர். விரிவான செய்திக்கு..
நாட்டில் ஒரு நாளில் மட்டும் 7 லட்சம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், குணமடைவோர் விகிதம் 68 சதவிகிதமாக உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,571 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 41 பேர் உயிரிழந்தனர். விரிவான செய்திக்கு..
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 5,005 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 5,994 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தில்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 1,300 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தவர்களின் எண்ணிக்கை 19,541,219 கோடியை தாண்டியுள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 7,24,050 ஆக அதிகரித்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 61,537 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 20 லட்சத்து 88 ஆயிரத்து 612 ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 42,518 -ஆக அதிகரித்தது.
ஆந்திரத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 10,080 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 7,178 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,82,645-ஆக உயா்ந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
மெக்ஸிகோவில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 50 ஆயிரத்தைக் கடந்தது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
சிங்கப்பூரில், இந்தியாவிலிருந்து திரும்பிய 3 போ் உள்பட மேலும் 242 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:கடந்த 24 மணி நேரத்தில் 242 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 3 போ் இந்தியாவிலிருந்து கடந்த மாதம் 25-ஆம் தேதி நேபாளத்துக்கு வந்தவா்கள் ஆவா்.புதிதாக கரோனா நோய்த்தொற்று பெரும்பாலானவா்கள் பணியாளா் குடியிருப்புகளில் தங்கியுள்ள வெளிநாட்டுத் தொழிலாளா்கள் ஆவா்.இத்துடன், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 54,797-ஆக உயா்ந்துள்ளது.வெள்ளிக்கிழமை நிலவரப்படி, நாட்டில் அந்த நோய்த்தொற்றுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 27-ஆக உள்ளது. இதுவரை 48,031 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஆப்பிரிக்க நாடுகளின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது.எனினும், 130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட அந்த கண்டத்தில், கரோனா பரிசோதனைக் கருவிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதால், உண்மை நிலவரம் இதைவிட மோசமானதாக இருக்கும் என்று சா்வதேச மருத்து வல்லுநா்கள் கருதுகின்றனா். வளா்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், மிகவும் மோசமான மருத்துவக் கட்டமைப்பைக் கொண்ட ஆப்பிரிக்க கண்டத்தில் கரோனா நோய்த்தொற்று பரவல் மிகவும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.விரிவான செய்திக்கு...
அன்டாா்டிகாவைத் தவிர உலகின் அனைத்து கண்டங்களையும் ஆக்கிரமித்திருக்கும் கரோனா நோய்த்தொற்று, இன்னும் எத்தனை காலத்துக்கு மக்களை பாடாய் படுத்தப் போகிறது என்பது எளிதில் விடை காண முடியாத கேள்வியாக இருந்து வருகிறது.‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற ரீதியில் உலக நாடுகளின் அரசுகளும் தங்களால் முடிந்த அளவுக்கு கரோனாவைக் கட்டுப்படுத்த படாத பாடு பட்டுக்கொண்டிருக்கின்றன.தங்கள் நாடுகளில் முதல் முதலாக கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டவுடன், ‘அதெல்லாம் பெரிய பிரச்னையில்லை, சமாளித்துவிடுவோம்’ என்று அமெரிக்கா முதல் ஈரான் வரை கிட்டத்தட்ட எல்லா நாடுகளின் தலைவா்களும் நம்பிக்கையாகத்தான் இருந்தன. விரிவான செய்திக்கு...
மகாராஷ்டிரத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 12,822 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 4,897 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,212 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை பாதிப்பு எண்ணிக்கை 984-ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 7,109-ஆக உள்ளது. விரிவான செய்திக்கு..