எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் குடும்பத்தினருடன் ஓபிஎஸ் சாமி தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், அவரது தம்பி ஆகியோர் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தனர்.

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 11:30 am IST

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், அவரது தம்பி ஆகியோர் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலுக்கு குடும்பத்தினருடன் வருகை தந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து குலதெய்வம் கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தனது மனைவி இறந்து ஒரு வருடம் ஆனதைத் தொடர்ந்து குலதெய்வ வழிபாட்டிற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தார்.

வெள்ளிக்கிழமை காலை தனது தம்பி ராஜா, மகன் பிரதீப், மருமகள் மற்றும் குடும்பத்தினருடன் ஸ்ரீ ஆண்டாள் கோயிலுக்கு வருகை தந்த ஓ. பன்னீர்செல்வத்துக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து யானைக்கு காய்கறி வழங்கிய விட்டு ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் தனது குடும்பத்தினர் பேரில் சிறப்பு அர்ச்சனை செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பரிவட்டம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து குடும்பத்தினருடன் வெளியே வந்த ஓ. பன்னீர்செல்வம் தனது மனைவி இறந்து ஒரு வருடம் ஆன நிலையில் குலதெய்வம் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத்தோப்பு வனப்பகுதியில் அமைந்துள்ள வனப்பேச்சி அம்மன் கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக மாவட்டச் செயலாளர்கள் கதிரவன், பாலகங்காதரன், தெய்வம் ஆகியோர் வரவேற்பு கொடுத்தனர். இதில் வழக்குரைஞர் கண்ணன், ராஜபாளையம் முருகையா பாண்டியன் மற்றும் கான்சாபுரம் கண்ணன், ராமகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.