ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பற்கள் பளிச்சென்று இருக்க..?

ஈறுகளை முதலில் ஆள்காட்டி விரலால் அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால், ரத்தக் கசிவு ஏற்படாது.

News image
பளிச்சென்று பற்கள்
Updated On :16 நவம்பர் 2024, 6:30 pm

ஆர். ஆர்.

பெண்கள் தங்களது பற்கள் பளிச்சென்று இருப்பதை விரும்புவர். ஒழுங்காக பற்களைத் தேய்க்காமல் விட்டால் பல் வலி, ஈறு வீக்கம், சீழ்வடிதல் போன்ற பல தொல்லைகளுடன் துர்நாற்றம் வீசும். பற்களைப் பாதுகாக்கச் செய்ய வேண்டியவை:

ஈறுகளை முதலில் ஆள்காட்டி விரலால் அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால், ரத்தக் கசிவு ஏற்படாது.

எலுமிச்சம் பழ சார் எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால், பற்கள் பளிச்சென்று இருக்கும்.

மஞ்சள் நிறம் மாற பொடி உப்பை பயன்படுத்தலாம்.

நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் புதினா பற்பொடியை வாங்கி, தினமும் பல் தேய்த்தாலும் பளிச்சென்று இருக்கும்.

கிராம்பை எடுத்து வாயில் போட்டு மென்றால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.

சாப்பிட்டவுடன் உப்பு கலந்த நீரால் வாய் கொப்பளித்தால், சாப்பிட்ட கறை நீங்குவதுடன் பற்களும் பளிச்சென்று மாறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.