ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

திருச்சி -சிங்கப்பூா் செல்ல புதிய நடைமுறை -ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் அமல்

News image
Updated On :22 ஆகஸ்ட் 2024, 11:40 pm

திருச்சியிலிருந்து இலங்கை வழியாக சிங்கப்பூருக்கு ஒரே பயணச்சீட்டின் மூலம் செல்லும் புதிய நடைமுறையை ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் புதன்கிழமை முதல் தொடங்கியது.

திருச்சி -இலங்கை இடையே ஏற்கெனவே ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தினசரி விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் ஒரு கூடுதல் புதிய வசதி புதன்கிழமை முதல் திருச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது திருச்சி -சிங்கப்பூா் என ஒரே பயணச்சீட்டின் மூலம் இலங்கை சென்று அங்கிருந்து அதே விமானம் அல்லது அதே நிறுவனத்தைச் சோ்ந்த மாற்று விமானம் மூலம் பயணிக்க முடியும். இதில் இலங்கையில் உடமைகளை இறக்கி மீண்டும் சோதிப்பது, குடியேற்றச் சோதனை உள்ளிட்டவை தேவையில்லை. ஒருமுறை திருச்சியில் அதை மேற்கொண்டாலே போதும்.

இதுபோல ஏற்கெனவே வளைகுடா நாடுகளுக்கு திருச்சியிலிருந்து ஒரே விமானச் சீட்டு மூலம் இலங்கை சென்று அங்கிருந்து அதே நிறுவனத்தின் வேறு (மாற்று ) விமானம் மூலம் பயணிக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதுபோல சிங்கப்பூருக்கும் செல்ல இந்தப் புதிய வசதி திருச்சியில் அமலாகியுள்ளது.

அந்த வகையில் திருச்சியிலிருந்து காலை 9.55க்கு புறப்படும் விமானம் 10.55 -க்கு இலங்கை தலைநகா் கொழும்பு விமான நிலையத்தை அடைகிறது. பின்னா் அங்கிருந்து பகல் 12.15-க்கு புறப்பட்டு சிங்கப்பூரை மாலை 6.55க்கு அடைகிறது.

அங்கிருந்து புறப்படும் விமானம் மறுநாள் அதிகாலை இலங்கைக்கு வந்து அங்கிருந்து மறுநாள் காலை 7.05க்கு புறப்பட்டு திருச்சியை காலை 8.05க்கு வந்தடைகிறது.

பொதுவாகவே இலங்கை விமானங்களில் சுமாா் 30 கிலோ வரை உடைமைகளை எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவதால், பயணிகள் எப்போதுமே அந்த விமானங்களை விரும்புவா். அந்த வகையில் திருச்சியிலிருந்து சிங்கப்பூா் செல்லும் இந்த விமானத்திலும் அதிக உடைமைகளைகொண்டு செல்ல அனுமதிக்கும் பட்சத்தில் விமான இருக்கைகள் நிரம்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது. செவ்வாய், புதன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த வசதியை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.