முகப்பு
தமிழ்நாடு

கோவை, சென்னையில் குறையும் கரோனா

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக அதிகமாக கரோனா பதிவாகி வரும் கோவை, சென்னை மாவட்டங்களில் கரோனா சற்று குறையத் தொடங்கியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:59 AM
பகிர்:

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக அதிகமாக கரோனா பதிவாகி வரும் கோவை, சென்னை மாவட்டங்களில் கரோனா சற்று குறையத் தொடங்கியுள்ளது.

கோவையில் புதிதாக 181 பேருக்கும், சென்னையில் 170 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் நேற்று 190 பேரும், சென்னையில் 172 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்றைய பாதிப்பை விட இன்று சற்று குறைந்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 130 பேரும், தஞ்சாவூரில் 84 பேரும், திருப்பூரில் 72 பேரும், கடலூரில் 54 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக கோவையில் 4 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அதற்கு அடுத்தபடியாக சென்னை, திருச்சியில் தலா 3 பேரும் உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.