திருப்பூர்

அவிநாசியை நகராட்சியாக்கக் கோரி பாஜகவினர் கையெழுத்து இயக்கம்

DIN

அவிநாசியை நகராட்சியாக அறிவிக்கக் கோரி பாஜகவினர் அவிநாசி பகுதியில் புதன்கிழமை மாலை கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியை பாஜக மாவட்டத் தலைவர் செந்தில் வேல் துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர், “அவிநாசியை நகராட்சியாக அறிவிக்கும் வரையில் போராட்டம் தொடரும். அடுத்த கட்டமாக முதல்வருக்குத் தபால் அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு வகையில் போராட்டங்கள் தொடரும்” என்றார்.

மாவட்ட பொதுச் செயலாளர் கதிர்வேல், மண்டலத் தலைவர்கள் சுரேஷ், கிருஷ்ணமூர்த்தி, கலை கலாச்சாரப் பிரிவு மாவட்டத் தலைவர் சீனிவாசன், ஊரக நகர்ப்புற வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் தினேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

SCROLL FOR NEXT