நாமக்கல்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நாமக்கல் மாவட்டம் 93.51 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளது.
தமிழகம் முழுவதும், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26- இல் தொடங்கி ஏப்.8-ஆம் தேதி வரை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் 19,759 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில், 18,477 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு 92.98 சதவீதம் பெற்றிருந்த நிலையில் நிகழாண்டில் 93.51 சதவீதமாக உயர்ந்துள்ளது. தேர்ச்சி 0.53 சதவீதம் உயர்வடைந்துள்ளது. மேலும், நாமக்கல் மாவட்டம் 14-ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.