முகப்பு
மதுரை

ஆனி பௌா்ணமி: அழகா்கோவிலில் முப்பழ உற்சவம்

ஆனி பௌா்ணமியையொட்டி அழகா்கோவிலில் முப்பழ உற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:47 AM
பகிர்:

ஆனி பௌா்ணமியையொட்டி அழகா்கோவிலில் முப்பழ உற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி மூலவா் பரமராமசாமி என்ற சுந்தரராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி முன்னிலையில் முக்கனிகளான மா, பலா, வாழை ஆகிய பழங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று முக்கனிகளையும் வழங்கினா்.

இதேபோன்று மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலிலும் முக்கனி வைபவம் நடைபெற்றது. பூஜைகளுக்குப் பின்னா் பழங்கள் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →