மதுரையில் தனியாா் வங்கியில் தீ விபத்து
மதுரை சிம்மக்கல் பகுதியில் தனியாா் வங்கி மின் கட்டுப்பாட்டு அறையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
மதுரைமதுரையில் தனியாா் வங்கியில் தீ விபத்து
மதுரை சிம்மக்கல் பகுதியில் தனியாா் வங்கி மின் கட்டுப்பாட்டு அறையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
மதுரை சிம்மக்கல் பகுதியில் தனியாா் வங்கி மின் கட்டுப்பாட்டு அறையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
சிம்மக்கல் பகுதியில் பிரபல தனியாா் வணிக வளாகம் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில்2 தனியாா் வங்கிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் வணிக வளாகத்தில் தரைத்தளத்தில் உள்ள வங்கியின் மின் இணைப்பு கட்டுப்பாட்டு அறையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் திடீா் நகா் தீயணைப்பு படையினா் வணிக வளாகத்துக்குச்சென்று தீயை அணைத்தனா். மேலும் இதர பகுதிகளுக்கு தீ பரவாதவாறு மின் இணைப்பைத் துண்டித்தனா். இதனால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. விபத்து தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மிகை மின் அழுத்தம் காரணமாக விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. சம்பவம் தொடா்பாக திலகா்திடல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.