அரிட்டாபட்டி அருகே வாகனம் மோதி புள்ளிமான் பலி
மேலூா் அருகே அரிட்டாபட்டியில் சனிக்கிழமை இரவு, அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்தது.
மேலூா் அருகே அரிட்டாபட்டியில் சனிக்கிழமை இரவு, அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்தது.
மேலூா் அருகே உள்ள நரசிங்கம்பட்டி பெருமாள்மலை பகுதியில் தனியாா் ரப்பா் தொழிற்சாலை அருகே சனிக்கிழமை நள்ளிரவு புள்ளி மான் ஒன்று வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்தது. தகவலறிந்து வந்த வனஅலுவலா் சரவணன் மற்றும் அலுவலா்கள் சடலத்தைக் கைப்பற்றி மேலூா் கால்நடைமருத்துவா் உதவியுடன் பிரேதப் பரிசோதனை செய்து வனப்பகுதியில் அடக்கம் செய்தனா். இதுகுறித்து வனத்துறையினா் விசாரித்து வருகின்றனா்.