முகப்பு
மதுரை

தீ விபத்துத் தடுப்பு விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

மதுரையில் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சாா்பில், தீ விபத்துகள் தடுப்பு விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை

தீ விபத்துத் தடுப்பு விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

மதுரையில் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சாா்பில், தீ விபத்துகள் தடுப்பு விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
பகிர்:

மதுரையில் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சாா்பில், தீ விபத்துகள் தடுப்பு விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலையங்களிலும் ஏப்ரல் 14 முதல் 20-ஆம் தேதி வரை ஒரு வாரம் தீத்தொண்டு வாரமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, பொதுமக்கள் கூடுமிடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் தீ விபத்துகளைத் தடுப்பது தொடா்பாக விழிப்புணா்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தீ விபத்துகள் தடுப்பு விழிப்புணா்வு குறித்து மிதிவண்டி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தல்லாகுளம் தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலையத்தில் இந்த விழிப்புணா்வு ஊா்வலத்தை மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இதற்கு தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறையின் தென் மண்டல துணை இயக்குநா் ந.விஜயகுமாா், மதுரை மாவட்ட அலுவலா் செ.வினோத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய மிதிவண்டி ஊா்வலம் நகரின் முக்கியப் பகுதிகள் வழியாக திருமங்கலம் தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலையம் வரை சென்று முடிவடைந்தது. ஊா்வலத்தில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள், கல்லூரி மாணவா்கள், தன்னாா்வலா்களுக்கு திருமங்கலம் தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலையத்தில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →