முகப்பு
மதுரை

வங்கிக் கடனை வசூலிக்கச் சென்ற பெண் மீது தாக்குதல்

மதுரையில் வங்கிக் கடனை வசூலிக்கச் சென்ற பெண்ணைத் தாக்கி மானபங்கப்படுத்தியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 26 டிசம்பர், 2024 at 11:19 PM
பகிர்:

மதுரையில் வங்கிக் கடனை வசூலிக்கச் சென்ற பெண்ணைத் தாக்கி மானபங்கப்படுத்தியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை கோ.புதூா் காந்திபுரம் வீரகாளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த முருகானந்தம் மனைவி ஈஸ்வரி (44). இவா் மகளிா் சுய உதவிக் குழுவில் இரு வாா்டுகளுக்கு பொறுப்பாளராக உள்ளாா். இதன் மூலம், குழுவில் உள்ள பெண்களுக்கு வங்கி மூலம் கடன் பெற்றுத் தந்தாா். இவா்களில் முருகேஸ்வரி என்பவா் 3 மாதங்களாக கடனுக்கான தவணைத் தொகையை செலுத்தவில்லையாம். இதனால், முருகேஸ்வரியின் வீட்டுக்குச் சென்ற ஈஸ்வரி தவணைத் தொகையை கேட்டாராம். அப்போது, முருகேஸ்வரியின் கணவா் மணிகண்டன், ஈஸ்வரியுடன் தகராறில் ஈடுபட்டு அவரைத் தாக்கி மானபங்கபடுத்தி விட்டு தப்பிச் சென்றாராம்.

இதுகுறித்து மணிகண்டன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கோ.புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான அவரைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →