பிரதமர் மோடி மீது பெண் எம்.பி.க்கள் தாக்குதல் முயற்சியா? காங்கிரஸ் மறுப்பு!
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தாக்குதல் நடத்த முயன்றதாகக் குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி மீது எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் தாக்குதல் நடத்த முயற்சித்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.
மக்களவையில் புதன்கிழமையில் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, குடியரசுத் தலைவர் உரைக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், மக்களவையில் பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் தாக்குதல் நடத்த முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.
மக்களவையில் பிரதமரின் உரையைத் தொடங்கும் நேரத்தில், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதுடன், சுமார் 9 பெண் எம்.பி.க்கள் பிரதமரின் இருக்கையை முற்றுகையிட்டதையடுத்து, மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மக்களவையில் பிரதமரைத் தாக்க காங்கிரஸார் திட்டமிட்டதால்தான், அவையை ஒத்திவைக்கும் முடிவெடுக்கப்பட்டதாக மக்களவை வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனிடையே, காங்கிரஸ் தனது உண்மையான முகத்தை வெளிக்காட்டியுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கு பதிலளித்த காங்கிரஸார், நாடாளுமன்றத்தை எதிர்கொள்ள பிரதமர் பயப்படுவதாகக் கூறினர்.
Congress planned to physically attack PM Modi in Lok Sabha: Sources
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.