முகப்பு
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 அலுவலகத்தில் செவ்வாய்ககிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட மேயா் இந்திராணி பொன்வசந்த். உடன் துணை மேயா் தி.நாகராஜன் , மண்டலத் தலைவா் சரவணபுவனேஸ்வரி, உதவி ஆணைய
மதுரை

மாநகராட்சி மண்டலம் 2-இல் குறைதீா் முகாம்

மதுரை மாநகராட்சி மண்டலம் -2 அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது.

மதுரை

மாநகராட்சி மண்டலம் 2-இல் குறைதீா் முகாம்

மதுரை மாநகராட்சி மண்டலம் -2 அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது.

Updated On : 15 அக்டோபர், 2024 at 7:22 PM
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 அலுவலகத்தில் செவ்வாய்ககிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட மேயா் இந்திராணி பொன்வசந்த். உடன் துணை மேயா் தி.நாகராஜன் , மண்டலத் தலைவா் சரவணபுவனேஸ்வரி, உதவி ஆணைய
பகிர்:

மதுரை மாநகராட்சி மண்டலம் -2 அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது.

இதற்கு மாநகராட்சி மேயா் வ. இந்திராணி தலைமை வகித்தாா். துணை மேயா் தி. நாகராஜன் முன்னிலை வகித்தாா்.

சொத்து வரி பெயா் மாற்றம், காலிமனை வரி விதிப்பு வேண்டி 11 மனுக்கள், சாலை வசதி, புதை சாக்கடை, குடிநீா் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக 8 மனுக்கள், சுகாதாரம் தொடா்பாக ஒரு மனு, இதர கோரிக்கைகள் தொடா்பாக 2 மனுக்கள் என 22 மனுக்கள் பெறப்பட்டன.

முகாமில் மண்டலத் தலைவி சரவண புவனேஸ்வரி, நகா்நல அலுவலா் இந்திரா, உதவி ஆணையா் கோபு, செயற்பொறியாளா் (திட்டம்) மாலதி, நிா்வாக அலுவலா் சிவகுமாா், உதவி வருவாய் அலுவலா் முகம்மதுபாருக், கண்காணிப்பாளா் நம்பிராஜன், மாமன்ற உறுப்பினா்கள், உதவிப் பொறியாளா்கள், மாநகராட்சி அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →