நாகப்பட்டினம்

கோடியக்கரையில் ரப்பர் படகு கரை ஒதுங்கிய சம்பவம்: போலந்து நாட்டைச் சேர்ந்தவர் கைது

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் ஆளில்லா  ரப்பர் படகு ஒன்று  ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கிய நிலையில், அதில் வந்த போலந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆறு காட்டுத்துறை மீனவ கிராம கடற்கரையில் ஞாயிறு இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கோடியக்கரை பழைய கலங்கரை விளக்கத்துக்கு அருகே முனைக்காடு பகுதியில் ஆளில்லா ரப்பர் படகு ஒன்று ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது தெரிய வந்தது.

இதையடுத்து, அங்கு சென்ற வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல் துறையினர் படகினை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

தஞ்சை டி.ஐ.ஜி, நாகை, திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், விமானப் படை முகாம் அதிகாரிகள், கடற்படை, வனத்துறை  என பல்வேறு பிரிவு காவல் துறையினர்   நிகழ்விடத்தில் விசாரித்தனர்.

இந்த நிலையில், அன்று இரவு போலந்து நாட்டைச் சேர்ந்த ஒருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நியாய விலைக்கடை மீது விழுந்த மரத்தை அகற்றக் கோரிக்கை

‘க்யூட்-யுஜி’ தோ்வு: முதல் நாளில் 75% போ் பங்கேற்பு

பிளஸ் 1 தோ்வு: கென்னடி பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி

இணையதளம் மூலமே மனை வரன்முறை, கட்டட வரைபட அனுமதி

2,553 மருத்துவா் பணியிடங்கள்: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT