நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் பிரசார இயக்கம் தொடக்கம்

DIN

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கொள்ளும் பிரசார இயக்கம் இன்று (ஜூன்.20) காலை தொடங்கியது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஏழுமுனைகளில் இருந்து புறப்பட்டு பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கான பிரசாரம் இன்று (20.06.22 ) காலை வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கியது.

மாவட்ட துணைத் தலைவர் கே.இராஜூ தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன், வட்டச் செயலாளர் வி.எஸ்.இராமமூர்த்தி, மாநிலச் செயலாளர் சா.டேனியல் ஜெயசிங், மாநில துணைத் தலைவர் ஏ.பெரியதாசு ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரூா் பாஜகவினருக்கு பாராட்டு விழா

தென்காசியில் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க வலியுறுத்தல்

செப்.2015 முதல் 2021 வரை எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தனித்தோ்வா்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற இறுதி வாய்ப்பு

போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

சாத்தான்குளம் அருகே ஹோட்டல் ஊழியா் மா்ம மரணம்

SCROLL FOR NEXT