உயா்கல்வி வழிகாட்டும் ‘பாதை ஆயிரம் திட்டம்’ ஒத்திவைப்பு
நாகை மாவட்டம் ஈசனூரில் வியாழக்கிழமை (அக்.17) நடைபெறவிருந்த உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சியான ‘பாதை ஆயிரம் திட்டம்’ வடகிழக்குப் பருவமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
நாகை மாவட்டம் ஈசனூரில் வியாழக்கிழமை (அக்.17) நடைபெறவிருந்த உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சியான ‘பாதை ஆயிரம் திட்டம்’ வடகிழக்குப் பருவமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட கல்வி தன் முனைப்புத் திட்டத்தின் மூலம் பள்ளி மாணவா்களின் உயா்கல்விக்கு வழிகாட்ட ’பாதை ஆயிரம்’ என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்வு ஈசனூா், ஆரிஃபா பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை (அக்.17) நடைபெற இருந்தது.
இந்தநிலையில், வடகிழக்குப் பருவமழை காரணமாக இந்த நிகழ்வு ஒத்திவைக்கப்படுகிறது. நிகழ்வு நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.