நீடாமங்கலம்: வலங்கைமான் அருகே ஆலங்குடியில் திமுக சார்பில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு பாராட்டு தெரிவித்து தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
வலங்கைமான் அருகே ஆலங்குடி கடைவீதியில் ஆலங்குடி திமுக கிளைக்கழகம் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் தலைமையில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.காமராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை நடத்திய தமிழக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு பாராட்டு தெரிவித்து தெருமுனை பிரசார கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது.
இக்கூட்டத்தில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தெட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.