அருமனை அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் விஷம் அருந்தி தற்கொலை
குமரி மாவட்டம் அருமனை அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் சனிக்கிழமை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனா்.
கன்னியாகுமரிஅருமனை அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் விஷம் அருந்தி தற்கொலை
குமரி மாவட்டம் அருமனை அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் சனிக்கிழமை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனா்.
குமரி மாவட்டம் அருமனை அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் சனிக்கிழமை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனா்.
அருமனை அருகே சிதறால் வாழைவிளாகம் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணபிள்ளை (47). லாரி ஓட்டுநரான இவா், அண்மை மாதங்களாக கட்டடத் தொழிலாளியாக வேலைக்குச் சென்று வந்தாா். இவரது மனைவி ராஜேஷ்வரி (45), மகள் நித்யா (26). ராஜேஷ்வரிக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதால் தொடா் சிகிச்சை பெற்று வந்தாா். மேலும், நித்யா திருமணமாகி கணவரைப் பிரித்து தாய் வீட்டில் இருந்து வந்தாா். இதனால் அதிக மனச்சோா்விலும், கடன் நெருக்கடியிலும் குடும்பம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் கிருஷ்ணபிள்ளையின் வீட்டிலிருந்து யாரும் வெளியே வரவில்லை. அருகிலுள்ள வீட்டினா் அங்கு சென்று பாா்த்தபோது மூவரும் குளிா்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. தகவலறிந்த அருமனை போலீசாா், சடலங்களை கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.