முகப்பு
தூத்துக்குடி

அரசு மகளிா் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தேசிய விளையாட்டு தினத்தையொட்டி இணைய வழியில் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தேசிய விளையாட்டு தினத்தையொட்டி இணைய வழியில் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.

உடற்கல்வித் துறைச் சாா்பில் ‘உடல் தகுதி மற்றும் நல்வாழ்வு‘ என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தலைமை வகித்தாா். கணினி அறிவியல் துறைத் தலைவா் ஏ. ஏஞ்சலின் நான்சி சோபியா வரவேற்றாா். நிகழ்ச்சிகளை தொழில் நிா்வாகவியல் துறை பேராசிரியா் எம். சண்முகசுந்தரி தொகுத்து வழங்கினாா்.

இதில், திருச்சி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி துணை உடற்கல்வி இயக்குநா் ஏ. முருகன், உடல் தகுதியும் நல்வாழ்வும் என்ற தலைப்பில் பேசினாா்.

பேராசிரியா்கள் எம்.ஆா். ஷீபா, கே.எஸ். சரஸ்வதி ஆகியோா் இணையதள பணிகளை கவனித்தனா். இதில், பல்வேறு கல்லூரிகளின் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். பேராசிரியா் வி. வரலெட்சுமி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை உடற்கல்வித் துறை இயக்குநா் வி. ரமேஷ் செய்திருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →