சாத்தான்குளம் அருகே விஷம் குடித்த பெண் உயிரிழப்பு
சாத்தான்குளம் அருகே விஷம் குடித்த பெண் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சாத்தான்குளம் அருகே விஷம் குடித்த பெண் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சாத்தான்குளம் அருகே நெடுங்குளம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சிதம்பரம் மனைவி ராமலட்சுமி(40). இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா். சிதம்பரம் 7 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதனால் ராமலட்சுமி, கூலி வேலைக்கு சென்று குடும்பத்தைக் கவனித்து வந்தாா்.
இதனிடையே அவருக்கும், பக்கத்து வீட்டைச் சோ்ந்த சிலருக்கும் இடையே பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்ததாகவும், அவரை சிலா் அவதூறாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவா் வெள்ளிக்கிழமை வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தாராம். உறவினா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் சனிக்கிழமை இறந்தாா். புகாரின் பேரில் சாத்தான்குளம் ஆய்வாளா் பாஸ்கரன் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றாா்.