செவிலியா் கல்லூரி பட்டமளிப்பு
புதுக்கோட்டை கற்பக விநாயகா செவிலியா் கல்லூரியின் 8ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை கற்பக விநாயகா செவிலியா் கல்லூரியின் 8ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரிச் செயலா் என். சுப்பிரமணியன், அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன் ஆகியோா் தலைமை வகித்தனா். செங்கல்பட்டு கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரியின் மகப்பேறு மருத்துவா் எஸ்ஆா். ரம்யா கலந்து கொண்டு, 50 இளநிலை அறிவியல் மாணவிகளுக்கும், 5 முதுநிலை அறிவியல் மாணவிகளுக்கும் பட்டங்களை வழங்கினாா்.
கல்லூரி முதல்வா் சுமித்ரா ஆண்டறிக்கை வாசித்தாா். முன்னதாக துணை முதல்வா் வாணி சித்ரா வரவேற்றாா். முடிவில் பேராசிரியா் சலோமி சங்கீதா நன்றி கூறினாா்.