புதுவையில் ஆட்சியைத் தக்கவைக்கிறதா என்.ஆர். காங்கிரஸ்? கருத்துக் கணிப்பு!
புதுவை மாநிலத்தில் மீண்டும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்பு.
புதுவையில் 30 தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெல்லப்போவது யார்? என்பதை முன்கூட்டியே கணிக்கும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன.
புதுவையில் எந்தக் கூட்டணி கைப்பற்றப்போகிறது என்பது குறித்து வெளியான கருத்துக் கணிப்புகளின் தொகுப்பு.
ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பு
Advertisement
என்.ஆர். காங்கிரஸ்: 16-19 இடங்கள்
காங்கிரஸ்: 10-12 இடங்கள்
30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக ஏப்.9-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் முடிந்து, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் செய்தன. 30 தொகுதிகளிலும் மொத்தம் 294 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாறு காணாத அளவில் 89.87 சதவீத வாக்குப் பதிவானது. இது கடந்த தோ்தலைக் காட்டிலும் 7.67 சதவீதம் அதிகமாகும்.