பட அதிபர்களுக்கும், பெரிய ஹீரோக்களுக்கும் இருந்தாக வேண்டிய சமூகப் பொறுப்புணர்வு குறித்து பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருக தாஸ் தமது சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டிருந்தார். அதிலிருந்து;
சமூகத்தில் சினிமாவின் ஆழமான தாக்கத்தைப் பற்றி நாம் சரியாகப் புரிந்து கொள்ள மறுக்கிறோம். சினிமா, சாதாரண ரசிகர்களின் மனதில் ஏற்படுத்திச் செல்லும் தாக்கத்தை உணர்ந்தவர்களாக சினிமாக்காரர்கள் இருக்க வேண்டும் என்பது தான் என்னைப் போன்றவர்களின் விருப்பம். இதை பெரிய பட அதிபர்கள், மற்றும் பெரிய ஹீரோக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தங்களுடைய படங்களில், அவசியமற்று, போகிற போக்கில் புகைபிடிப்பதாக காட்சிகள் வைக்கப் பட்டிருப்பின் அத்தகைய காட்சிகளில் நடிக்க பெரிய ஹீரோக்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் மறுப்புத் தெரிவிக்க வேண்டும். புகைப்பதையும், குடிப்பதையும் பற்றி மட்டுமே படமெடுக்கப் போவதாக இருந்தால், அந்தப் படத்தின் ஹீரோ, குடிப்பதாகவோ, புகைப்பதாகவோ காட்டப்படுவதில் ஏதாவது அர்த்தமிருக்கலாம். ஆனால் பிற படங்களில் அனாவசியமாக அத்தகைய காட்சிகளை வைப்பது சமூகப் பொறுப்புணர்வு ஆகாது!
நிவின் பாலி நடிப்பில் தமிழில் மீண்டும் ஒரு ராபின் ஹுட் படம்
ப்ரியங்கா உபேந்திரா நடிக்கும் ‘ஹெளரா பிரிஜ்’ திரில்லர் படம், உண்மைச் சம்பவமாம்!
ஜோதிகா நடித்துள்ள ‘மகளிர் மட்டும்’: ஒவ்வொரு காட்சியிலும் பெண்களுக்கு ஒரு பட்டுப்புடைவை பரிசு!
புல்லட்டில் சென்று மகளைப் பள்ளியில் இறக்கி விட்டதைப் பெருமையாக உணர்கிறேன்: ஜோதிகா!
விக்ரம் பிரபு மகனுக்கு, பிரபாஸ் அனுப்பிய சர்ப்ரைஸ் கிஃப்ட்!