முகப்பு
செய்திகள்

நடிகை மீனாவுக்கு கரோனா : குடும்பத்தினர் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக உருக்கம்

நடிகை மீனா தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:02 AM
பகிர்:

நாட்டில் கரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரபலங்கள் பலரும் கரோனா மற்றும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நடிகர் அருண் விஜய் தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார். இயக்குநர் அருண் வைத்தியநாதன் ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்திருப்பதாக அறிவித்தார். 

இந்த நிலையில் நடிகை மீனா தான் உட்பட தன் குடும்பத்தினர் அனைவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.  

முழு கட்டுரையைப் படிக்க →