செய்திகள்

நடிகை அதிதி ராவின் காதலர் தின பதிவிற்கு சித்தார்த்தின் கமெண்ட் என்ன தெரியுமா?

நடிகை அதிதி ராவ் ஹைதரியின் காதலர் தின பதிவிற்கு நடிகர் சித்தார்த் கமெண்ட் செய்துள்ளார். 

DIN

நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்னம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்தார். 2019இல் அவரது அருவம் படம் வெளியானது.தெலுங்கில் 2021இல் மஹாசமுத்திரம் படம் வெளியானது. இந்தப் படத்தில் நடிகை அதிதி ராவ் ஹைதரி உடன் நடித்திருந்தார். 

அதிதி ராவ் ஹைதரி தமிழில் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், ஹே சினாமிகா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். அவரது பிறந்தநாளுக்கு ரசிகர்களும் பலர் நடிகர் நடிகைகளும் வாழ்த்து தெரிவித்தனர். சித்தார்த் கூறிய வாழ்த்து செய்தி மட்டும் சமூக வலைதளங்களில் வைரலானது. 

சித்தார்த்துக்கு பல நடிகைகளுடன் காதல் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தாலும் தற்போது அதிதி ராவுடன் காதல் இருப்பதாக அவரது இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. அந்த பதிவில் சித்தார்த், “இதய ராணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! உங்களது சிறிய, பெரிய அனைத்து விதமான கனவுகளுக்குமாக கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்” என எழுதி இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படத்தினை பதிவிட்டு இருந்தார்.

இதனால் இருவரும் காதலிக்கிறார்களோ என சமூகவலைதளத்தில் கிசுகிசுக்கப்பட்டது. தற்போது காதலர்தினத்திற்கு அதிதி ராவ் பழம்பெரு நடிகர் தர்மேந்திர டியோலுடம் ரோஜா பூவை தரும் புகைப்படத்தினை பதிவிட்டு, “மிக மிக அழகானவர். எதிர்பார்க்காத காதலர் தினம்” என தலைப்பிட்டுள்ளார். இந்தப் பதிவிற்கு நடிகர் சித்தார்த ஹார்டினை கமெண்ட்டாக பதிவிட்டுள்ளார். 

மேலும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் த்ரிஷா சித்தார்த் நடித்த படத்தினை காதலர் தின சிறப்பாக பகிர்ந்துள்ளார். இதனால் ரசிகர்கள் இருவரும் காதலிப்பது உறுதி என்பது போல கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT