முகப்பு
செய்திகள்

ஜெயம் ரவி பிறந்தநாளில் ஜீனி படத்தின் புதிய போஸ்டர்! ரிலீஸ் எப்போது?

நடிகர் ஜெயம் ரவியின் பிறந்த நாளில் ஜீனி படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

Updated On : 10 செப்டம்பர் 2024, 7:03 pm IST
ஜீனி படத்தின் புதிய போஸ்டர்
பகிர்:

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பின் நடிகர் ஜெயம் ரவியின் சைரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

நடிகர் ஜெயம் ரவி தற்போது அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜூனன் இயக்கத்தில் ’ஜீனி’ என்கிற ஃபேண்டசி படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நாயகிகளாக கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா கேபி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தை இயக்குகிறார் அர்ஜுனன் ஜூனியர். இவர் மிஷிகினிடன் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

வேல்ஸ் இண்டர்நெஷனல் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படமே ஜெயம் ரவியின் பெரிய படமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

'ஜீனி' திரைப்படம், திரையரங்க உரிமைகளை தவிர்த்து ஏற்கனவே ரூ. 60 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஜெயம் ரவி பிறந்த நாளில் இந்தப் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. தயாரிப்பு நிர்வாகம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகுமென தெரிவித்துள்ளது.

நடிகர் ஜெயம் ரவி, நேற்று (செப்.9) தனது மனைவியைப் பிரிவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, ஜெயம் ரவி பிரதர், காதலிக்க நேரமில்லை படங்களில் நடித்து முடித்துள்ளார்.

பிரதர் படத்தில் பால் டப்பா எழுதி பாடிய மக்காமிஷி எனும் பாடல் இன்ஸ்டாவில் மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments