திருவண்ணாமலை கோயிலில் அனிருத்!
மகா சிவராத்திரியையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் இசையமைப்பாளர் அனிருத் சாமி தரிசனம் செய்தார்.
மகா சிவராத்திரியையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் இசையமைப்பாளர் அனிருத் சாமி தரிசனம் செய்தார்.
சிவராத்திரியையொட்டி கோயிலில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் இருந்தபோதிலும், பொறுமையாக வரிசையில் நின்று வழிபட்டார்.
தென்னிந்திய சினிமாவின் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் அனிருத். தமிழில் பல முன்னணி நாயகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
Advertisement
Advertisement
தற்போது கூலி, ஜனநாயகன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும், சிவகார்த்திகேயனின் மதராஸி படத்திற்கும் ஒப்பந்தமாகியுள்ளார். அடுத்தடுத்து பெரிய படங்களுக்கு இசையமைத்து வருவதால், சிறிய படங்களுக்கு இசையமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்துக்கும் அனிருத் இசையமைத்திருந்தார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.
பல படங்கள் கைவசமிருந்தாலும் ஆன்மிகத்திற்கு அனிருத் நேரம் ஒதுக்கத் தவறுவதில்லை. சிவ பக்தரான அனிருத், மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார்.
பக்தர்கள் வெள்ளத்திலும் பொறுமையாக வரிசையில் நின்று, வழிபாடு செய்தார். கற்ப கிரகத்திற்கு அருகில் சென்றதும் நீண்ட நேரம் கண்களை மூடி வழிபாடு நடத்தினார். இது தொடர்பான விடியோக்கள் வெளியாகியுள்ளன. இதில் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | கூலி படத்தின் புதிய போஸ்டரில் இருப்பது யார்?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.