முகப்பு
வேலைவாய்ப்பு

தமிழில் எழுத, படிக்கத் தெரிந்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ளது.

Updated On : 6 ஆகஸ்ட் 2022, 2:03 pm IST
பகிர்:


மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ளது. இதற்கு இந்து மதத்தை சார்ந்த தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  

பணி: தாளம் - 01
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600

Advertisement

Advertisement

பணி: வேத பாராயணம் - 02
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

பணி: உப கோயில் ஓதுவார் - 01
சம்பளம்: மாதம் ரூ.12,600 - 39,900

தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட இசைப் பள்ளிகளில் இருந்து மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். 

பணி: உதவி பரிசாரகர் - 04
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருப்பதுடன், கோயில்களில் நெய்வேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். 

பணி: உதவி யானைப்பாகம் - 01
சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். யானைக்கு பயிற்சி அளித்து வழி நடத்தும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

பணி: கருணை இல்லக் காப்பாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400

பணி: கால்நடை பராமரிப்புத் தொழிலாளர் - 02
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

பணி: தொழில்நுட்ப உதவியாளர்(சிவில்) - 01
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500
தகுதி: பொறியியல் துறையில் கட்டட பொறியியலில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

பணி: ஜெனரேட்டர் ஆப்ரேட்டர் - 01
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400
தகுதி: மின் கம்பிப் பணியாளர்கள் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் இந்திரத்துறையில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: பிளம்பர் - 01
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900
தகுதி: பிளம்பிங் பிரிவில் தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: சமையல்காரர் - 01
சம்பளம்: மாதம் ரூ.13,200 - 41,800

பணி: உதவி சமையல்காரர் - 01
சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800
அனுபவம்: 50 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரிப்பதில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: தூய்மைப் பணியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500

தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.07.2022 அன்று 18 வயது நிறைவடைந்தவராகவும், 35 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் ரூ.100 செலுத்தி விண்ணப்பப் படிவத்தைப் பெற்று அதைப் பூர்த்திச் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 18.08.2022

மேலும் விவரங்கள் அறிய www.tnhrce.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments